Skip to main content

Posts

Showing posts from November, 2022

பிரதேச சபை நிதியில் பெருந்தோட்ட பகுதிகளுக்கு சேவை செய்வதிலுள்ள நடைமுறை சிக்கல்கள் அருள்கார்க்கி

 பிரதேச சபை நிதியில் பெருந்தோட்ட பகுதிகளுக்கு சேவை செய்வதிலுள்ள நடைமுறை சிக்கல்கள் அருள்கார்க்கி பெருந்தோட்டத் துறைக்கு உள்ளுராட்சி அமைப்புக்களின் சேவைகளை விஸ்தரித்தல் முழுமையாக இடம்பெறாமை இன்றைய உள்ளுராட்சி அரசாங்க முறையில் காணப்படும் மிகப்பெரிய குறைபாடாகும். இது பெருந்தோட்ட பகுதியில் உள்ள உள்ளுராட்சி அமைப்புக்களுக்கும் உறுப்பினர்களுக்கும் பாரிய ஒரு சவாலாக அமைந்துள்ளது.  இன்று சர்வதேச நிதிசார் நிறுவனங்களின் உதவியுடன் உள்ளுராட்சி அமைப்புக்களின் சேவைகளை விஸ்தரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் இவை கிராம, நகர சபைகளுக்கும், வடகிழக்கு பகுதிகளுக்கும் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது. பிரதேச சபைகளில் பாதீடு, அபிவிருத்தி போன்ற விடயங்களில் பெருந்தோட்ட மக்கள் பங்களிப்புச் செய்தாலும் அவர்களுக்கு சேவைகளை விஸ்தரிப்பதில் சட்ட சிக்கல்கள் காணப்படுகின்றன.  மஸ்கெலிய பிரதேச சபைக்கும் இந்த சிக்கல் நீண்டகாலமாக காணப்படுகின்றது. இப்பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பெருந்தோட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்களால் பெருந்தோட்ட பிரதேசங...