மாகாண சபையும் உள்ளூராட்சியும் அவசியமும் விமர்சனமும் அருள்கார்க்கி. அதிகாரப்பரவலாக்கத்தின் ஆரம்பகட்டமே இலங்கை போன்ற பல்லின நாடுகளில் பாரிய விமர்சனங்களுக்குள்ளானது. இலங்கையில் வாழும் அனைத்து இன, மத, மொழிப் பிரிவினரையும் கருத்தியல் ரீதியாக ஒன்றிணைக்கும் முயற்சிகள் இன்றுவரை சாத்தியப்படாத ஒரு சூழலில் அதற்கான முயற்சிகள் வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் இலங்கையின் இனப்பிரச்சினையானது இலங்கைத் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலானதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் மலையக மக்கள் குறித்த தேசிய கவனம் செலுத்தப்படாமையும் அம்மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகள் குறித்த சட்டரீதியான முன்னெடுப்புகள் குறித்தும் இதுவரை எவ்வித பொறிமுறையும் வகுக்கப்படவில்லை. நாட்டுக்குள்ளேயே அடிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாகவும், அரசியல், தொழிற்சங்க ரீதியாக சுரண்டப்பட்டு கொண்டிருக்கும் ஒரு தேசிய இனமாகவும் மலையக சமூகத்தை இன்றும் அடையாளப்படுத்தலாம். காலனித்துவ ஆட்சியாளர்களின் காலத்திலிருந்து பெருந்தோட்ட மக்களின் அரசியல் அபிலாசை...
In his blog, investigative journalist Arul Karki consistently showcases his prowess in uncovering critical information that shapes public discourse. Through meticulous research and fearless pursuit of the truth, Karki sheds light on issues that often go unnoticed or are deliberately concealed. His dedication to investigative journalism is evident in the depth of his analysis and the comprehensive nature of his reporting.