Skip to main content

Posts

Showing posts from January, 2022

ஒரு வசந்த காலத்துக்காக வருடம் முழுவதும் காத்திருக்கின்றோம்… ஜோக்கி தயாளனின் கதை அருள்கார்க்கி.

 ஒரு வசந்த காலத்துக்காக வருடம் முழுவதும் காத்திருக்கின்றோம்… ஜோக்கி தயாளனின் கதை அருள்கார்க்கி.   இலங்கையில் சுற்றுலாத்துறைக்கு மிகவும் பிரசித்தி பெற்ற நுவரெலியா நகரானது உலகளவில் அறியப்பட்ட ஒரு இடமாகும். வருடம் முழுவதும் சீரான காலநிலையும், பசுமையான சுற்றாடலும் நிறைந்த நுவரெலியா நகரானது கொவிட் பரவலைத் தொடர்ந்து பொலிவிழந்து வருகின்றது.  பெரும்பாலான நகரவாசிகள் இங்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மூலம் நாளாந்த வருமானத்தை சம்பாதிப்பவர்களாவர். தொடர்ச்சியான முடக்கம், பயணக்கட்டுப்பாடு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பவற்றின் காரணமாக இவர்கள் பாரிய சமூக, பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளனர். வியாபார ஸ்தலங்கள், வீதியோர கடைகள், குதிரையோட்டிகள், படகு சவாரி செய்வோர் போன்றோர் இவ்வாறு வருமானமிழந்து திண்டாடுகின்றனர். இவர்களின் குடும்ப பொருளாதாரம் கல்வி, என்பனவும் கடுமையான பின்னடைவுகளை கொண்டுள்ளது.  “நாம் காலையிலிருந்து மாலை வரை இங்கு இருப்போம். குதிரைகளை மேய்ச்சலுக்கு விடுதல், அவை பாதைகளை கடக்காமல் பார்த்துக் கொள்ளுதல், புல் வெட்டி...

நோயில் இருந்து உயிரை காப்பதா? பட்டினியில் இருந்து உயிரைக் காப்பதா? அருள்கார்க்கி.

  நோயில் இருந்து உயிரை காப்பதா? பட்டினியில் இருந்து உயிரைக் காப்பதா? அருள்கார்க்கி. பண்டாரவளை நகரத்தில் அன்றாடம் கட்டுமான உதவியாளராக தொழில் புரிந்து வாழ்க்கை நடாத்துபவர் குமார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவரின் மனைவி ஒரு தோட்ட தொழிலாளி. இவ்விருவரின் வருமானமே இந்த குடும்பத்தின் வாழ்க்கை செலவை கொண்டு செல்ல உதவியது.  பயணத்தடை, தனிமைப்படுத்தல், வீட்டில் இருந்தல் என்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார் குமார். “நான் பண்டாரவளை நகரில் மேசன் பாஸ் வேலை செய்தேன். இப்போது லொக்டவுன் போட்டாச்சி. தொழிலுக்கும் போக ஏலாது. எங்க ஊருலயும் எந்த கூலித் தொழிலும் கிடைப்பதில்லை. இந்த நெலம தொடர்ந்தா....." என கண்கலங்குகிறார் குமார்.  நோயில் இருந்து உயிரைக் காப்பதா? பசியில் இருந்து உயிரைக் காப்பதா? என போராட்டமாகியுள்ளது குமாரின் வாழ்வு. தோட்டபுறத்தில் வாழும் பெரும்பான்மையான அன்றாட கூலித்தொழில் செய்பவர்களின் நிலைமை இதுதான். தோட்ட வேலைகளில் இருந்து விலகி வெளியில் அன்றாடம் கூலித்தொழில் செய்து வந்தவர்கள் அவற்றை செய்யமுடியாத நிலையில் வருமானத்தை இழந்துள்ளனர். இங்கே கொரோனா என்ற ...